அடுத்து 24மணி நேரத்தில் நாட்டில் மாற்றங்கள் - மைத்திரி
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் நாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளது என சிறீலங்கா அதிபர் மைத்திரி பால சிறீசேனா தெரிவித்துள்ளார். இன்று மாலை நாட்டு மக்களுக்கு அவர்கள் வழங்கிய உரையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக பாதுகாப்புத்துறையில் உள்ள அதிகாரிகளே இவ்வாறு மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர் என மைத்திரி மேலும் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளார்.
அரச புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கபெற்ற அத்தகவல்கள் பற்றி புலனாய்வுத்துறை உயர் அதிகாரிகளினால் எனக்கும் அறியத்தரப்படவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். கிடைக்கப்பெற்ற அத்தகவல்களை எனக்கு அறிவித்திருப்பார்களாயின் உடனடியாக தக்க நடவடிக்கைகளை நான் எடுத்திருப்பேன் ஆகையால் அப்பொறுப்புக்களை ஏற்று செயற்பட வேண்டியவர்கள் அப்படி செய்யத் தவறியிருப்பதால் அவர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க நான் தீர்மானித்திருக்கின்றேன்.
நேற்று மாலை கூடிய பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை கூட்டத்திலும் இவ்விடயம் தொடர்பாக ஆழமாக கலந்துரையாடப்பட்டது. ஆகையினாலேயே நான் அரச பாதுகாப்பு துறையிலும் புலனாய்வு துறையிலும் முழுமையான மறுசீரமைப்பினை மேற்கொண்டு இவ்வாறான பயங்கரவாத செயல்கள் மீண்டும் ஏற்படாத வகையில் மிகக் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளேன் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். குறிப்பாக மலரும் நாளைய பொழுதில் இந்த நாட்டு மக்களுக்கு அச்சமும் பயமும் இன்றி வாழ்வதற்கு தேவையான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதற்கான சகல திட்டங்களையும் நான் வகுத்திருக்கின்றேன் என்றார்.
Post a Comment