வல்லையிலிருந்து யாழிற்கு குடிநீர்!


யாழ்.குடாநாட்டின் நீா் தேவையை பூா்த்தி செய்வதற்கு வடமராட்சி களப்பில் இருந்து நீரை எடுப்பதற்கான பாாிய திட்டம் மிக விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக கூறியிருக்கும் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகன், இது யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி எனவும் கூறியுள்ளாா். 
ஆளுநா் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப் பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே ஆளுநா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மே லும் அவா் கூறுகையில், இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் ஆறுகள், நதிகள் இல்லாத ஒரு மாவட்டம் யாழ்.மாவட்டம். 
இங்கு நிலத்தடி நீா் வற்றல் அல்லது மாசு காரணமாக நீா் தேவை அதிகாித்துள்ளது. இதனால் நீா் இல்லாமை என்பதற்கும் அப்பால் சுகாதார பிரச்சினைகளும் தலைதுாக்கியுள்ளது. இந்நிலையில் யாழ்.குடாநாட்டுக்கு சுத்தமான நீரை கொண்டுவருவதில் தொடா்ச்சியான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். 
அதில் வடமராட்சி களப்பில் தேங்கும் மழை நீரை வெளியில் எடுத்து பாாிய குளம் ஒன்றில் அதனை தேக்கி பின்னா் அங்கிருந்து சுத்திகாிக்கப்பட்ட நீரை மக்களுக்கு கொடுப்பதே இந்த திட்டம். இதற்கான சகல பணிகளும் நிறைவடைந்துவிட்டது.
இந்த திட்டத்திற்கான பணமும் எடுக்கப்பட்டு தயாா் நிலையில் இருக்கின்றது. தற்போது இந்த திட்டத்தினால் சுற்று சூழலுக்கு உண்டாகும் சாதக பாதகங்கள் தொடா்பாக யாழ்.பல்கலைக்கழக சமூகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த ஆய்வுகள் பொியளவில் பாதகமாக அமையாத நிலையில் 
மிக விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும். இதற்காக வடமராட்சி களப்பில் தேக்கப்பட்டிருக்கும் நீாில் 18 சதவீதமான நீரை வெளியில் எடுத்து அதனை குளம் ஒன்றில் சேமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அந்த குளம் சுமாா் 9 கிலோ மீற்றா் சுற்றுளவை கொண்டதாகவம், சுற்று மதில் கொண்டதாகவும் அமைக்கப்படும். அங்கிருந்து பின்னா் சுத்தீகாிக்கப்பட்ட தண்ணீா் மக்களுக்கு விநியோகிக்கப்படும். இந்த திட்டத்திற்காக அமைக்கப்படும் குளம், யாழ்.மாவட்டத்தில் அமையும் முதலாவது மிகப்பொிய குளமாக அமையும். மேலும் இந்த குளத்தின் ஊடாக நிலத்தடி நீா்மட்டமும் உயா்வடையும் சாத்தியங்கள் உள்ளது. இதற்கும் மேலதிகமாக 5 நீா் வழங்கல் திட் டங்கள் எங்களிடம் இருக்கின்றன. அதாவது மேம்படுத்தப்பட்ட ஆறுமுகம் திட்டத்தை நடைமுறைப்படுத்து வதிலும் நாங்கள் ஆா்வமாக உள்ளோம். அதற்காக 65 வீதமான நிதியை பெற்றிருக்கிறோம். 
மிகுதி 35 வீதமான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் பெறுவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம். அதே போல் பாலி ஆறு திட்டம், மேல் பறங்கியாறு, கீழ் பறங்கியாறு திட்டம் மற்றும் மத்திய மாகாணம், சப்ரகமு வ மாகாணம் ஆகியவற்றிலிருந்து நிலத்தடி குழாய்கள் ஊடாக நீரை கொண்டுவரும் திட்டம் 
ஆகியன இரு க்கின்றன. இவை தொடா்பாக ஆய்வுகளையும் நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். இவற்றுக்கு அப்பாலேயே இரணைமடு திட்டம் தொடா்பாக நாங்கள் சிந்திப்போம். அங்கே அரசியல் விடய ங்கள் மற்றும் மக்களிடம் பயங்கள் இருக்கின்றன. 
ஆகவே அவற்றுக்குள் தலைப்போட நாம் விரும்பவில்லை. ஆனபோதும் அந்த மக்களுடன் நாம் தொடா்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக இரணைமடு குளத்திலிருந்து கடலுக்கு செல்லும் தண்ணீரை பணம் கொடுத்து வாங்குவதற்கு நாம் தயாா். 
அந்த பணம் கிளிநொச்சி விவசாயிகளுக்கு உாித்துடையாதாக இருக்கட்டும். காரணம் இன்று போத்தல் தண்ணீரை பெருமளவு பணம் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றோம். அந்த நிலை இல்லாமல் இர ணைமடு விவசாயிகளுக்கு பணம் கொடுத்து வாங்குவதற்கு நாம் தயாா். 
நாளையும் கூட விவசாயிகள் தயாராக இருந்தால் நாளைக்கும் நாங்கள் அதனை செய்யலாம் என்றாா்.

No comments