இலங்கை தூதரகம் முற்றுகை!

"ஐநா மனித உரிமை மன்றத்தை ஏமாற்றி இனப்படுகொலை செய்த இலங்கையே தமிழகத்தை விட்டு வெளியேறு"

"பன்னாட்டு நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தி நீதி கிடைக்க இந்திய அரசே அழுத்தம் கொடு"
என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி,
ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் திராவிடர் விடுதலைக்ககழக கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில், இன்று  காலை 9மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் உணர்வார்கள் கலந்துகொண்டனர்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்  கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்!

No comments