பாக்கு நீரிணையை கடந்து 10 வயது சிறுவன் சாதனை!

தலைமன்னார் முதல் தனுஸ்கோடி வரையிலான பாக்ஜலசந்தி கடல் பகுதியை 10 மணி நேரம் 30 நிமிடத்தில் நீந்தி கடந்து 10 வயது சிறுவன் சாதனை.

தமிழகம் தேனி மாவட்டத்தை சேர்ந்த  ஜஸ்வந்த் என்ற 10 வயது சிறுவனை  இன்று அதிகாலை 4 மணியளவில் இலங்கை தலைமன்னார் அருகே உள்ள உருமலை பகுதியில் இருந்து கடலில் நீந்த தொடங்கினார், பின்னர்  சுமார் 9 மணியளவில் சர்வதேச கடல் எல்லையை கடந்த சிறுவன்  சரியாக பிற்பகல் 2.30 மணிக்கு தனுஸ்கோடி அரிச்சல் முனை கடற்கரையை வந்தடைந்தார் என்று நெறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறிய வயதில் சாதனை படைத்த சிறுவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

No comments