பூநகரியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான படைச்சிப்பாய் வைத்தியசாலையில்

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான நிலையில் இராணுவச் சிப்பாய் ஒருவர் நேற்று இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவச சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி இராணுவ முகாமில் கடமையாற்றெம் இராணுவச் சிப்பாய் ஒருவர் நேற்று மாலையில் காட்டிற்கு வேட்டைக்குச் சென்றுள்ளார். அவ்வாறு வேட்டைக்குச் சென்ற சமயம் அங்கே பொருத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுத் துவக்கில் அகப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக இராணுவச் சிப்பாயின் ஒரு காலில் குண்டு துளைத்துள்ளது. இதனால் படுகாயமடைந்த இராணுவச் சிப்பாய் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் படுகாயமடைந்த சிப்பாய் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பூநகரிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments