கடற்படைக்கு அஞ்சும் நீதிபதி!


ஆட்கடத்தல்கள் விடயங்களுடன் தொடர்புபட்ட கடற்படையினர் தொடர்பில் இலங்கை நீதிபதிகள் அச்சங்கொண்டுள்ளனர்.அவ்வகையில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர், தன்னைக் கைதுசெய்வதற்கு எதிரான உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிப்பதிலிருந்து நீதிபதியொருவர் விலகியுள்ளார்.

இதனால் எதிர்வரும் 7ஆம் திகதி வழக்கு பரிசீலிப்பதாக,  உயர் நீதிமன்றம் இன்று (28) அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் நலின் பெரேரா, நீதியரசர்களாக பிரியந்த ஜயவர்தன மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகியோர் முன்னிலையில், இந்த மனு இன்று, பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, தனிப்பட்ட காரணத்துக்காக, இந்த வழக்கில் தன்னால் கலந்துகொள்ள முடியாதென, நீதியரசர் பிரியந்த ஜயவர்தன அறிவித்தார். இதனைத் தொடர்ந்தே, இந்த மனு மீதான பரிசீலனை, மார்ச் மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments