வன்னியில் மீண்டும் சிறுத்தை அடி?

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்துஜயன்கட்டு காட்டுப்பகுதியில் விறகு வெட்ட சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.நேற்றயதினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் ஒட்டுசுட்டான் மருத்துவ மனை கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கபபட்டுள்ளார். முத்துஜயன் கட்டுப்பகுதியினை சேர்ந்த 55 அகவையுடைய பொன்னம்பலம் நடராசா என்பவரே இவ்வாறு சிறுத்தை கடிக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வன்னி பகுதியில் மீண்டும் சிறுத்தை தாக்குதல்கள் அண்மைக்காலமாக தலைதூக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments