வடக்கு தொடர்ந்தும் வெற்றிடமாகவே?


ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (04) பிற்பகல் பதவிப்பிரமாணம் செய்தனர்.
எனினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடமாகாண ஆளுநர் பதவி தொடர்ந்தும் பூரணப்படுத்தப்படாமலேயே உள்ளது.

அவர்களது பெயர் விவரங்கள் பின்வருமாறு
1. மேல் மாகாணம்            - அசாத் சாலி
2. மத்திய மாகாணம்         - சத்தேந்திர மைத்ரி குணரத்ன
3. வடமத்திய மாகாணம்  - சரத் ஏக்கநாயக்க
4. வடமேல் மாகாணம்      - பேசல ஜயரத்ன பண்டார
5. கிழக்கு மாகாணம்          - எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.

No comments