ஆற்றினுள் குதித்த தமிழ் இளைஞன் சடலமாக மீட்பு?


திருகோணமலையின் கிண்ணியாவில் கடற்படை மற்றும் அதிரடிப்படை துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பிக்க மகாவலி கங்கையினுள் பாய்ந்த தமிழ் இளைஞர்களுள் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை பதிலுக்கு தமிழ் மக்கள் நடத்திய தாக்குதலில் கடற்படையினர் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகாவலி கங்கை ஆற்றில் மணல் அகழ்வு பணியில் ஈடுபடும் மக்களிற்கும்  கடற்படை மற்றும் அதிரடிப்படைக்குமிடையே மூண்ட பிணக்கு பின்னர் கைகலப்பாகியிருந்தது.

கிண்ணியா பகுதியில் மகாவெலி ஆற்றில் குதித்த மூவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மண் அகழ்வுப் பணியில் ஈடுபட்டு வந்த மூவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கிண்ணியா கங்கைப் பாலம் பகுதியில் குறித்த இளைஞர்கள் ஆற்றில் பாய்ந்து மூழ்கியுள்ளனர்.
இதில் ஒருவர் தப்பித்துள்ளதுடன் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.
இந்நிலையிலேயே, ஆற்றில் குதித்த காணமற்போன இருவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

No comments