பெண்ணை கத்தியால் குத்தி 19 இலட்சம் வழிப்பறிக் கொள்ளை

கிளிநொச்சியில் நேற்றைய தினம் வீதியில் பயணித்த பெண்ணை கத்தியால் குத்தி 19 லட்சம் அபகாிக்கப்பட்டுள்ளது, குத்திய கத்தி வயிற்றில் பாய்ந்த நிலையில் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி அம்பாள்குளத்தைச் சேர்ந்த சுரேஸ்குமார் - யோகேஸ்வரி வயது 34 என்னும் இரு பிள்ளையின் தாயாரான. என்பவரே இவ்வாறு கத்திக் குத்துக்கு இலக் கானார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது ,

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் வசிக்கும் குறித்த பெண் குஞ்சுப்பரந்தன் பகுதி ஊடாக பூநகரி பகுதியில் ஒருவரிற்கு வழங்க வேண்டிய 19 லட்சம் ரூபா பணத்தை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றுள்ளார்.

இவ்வாறு பயணித்தவரை இருவர் வழி மறித்து .திடீரென கைப் பையை பறிக்க முயன்றுள்ளனர். இதனை தடுக்க முயன்ற சமயம் பெண் மீது கத்தியால் குத்திவிட்டு அவர் எடுத்துச் சென்ற 19 லட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

குறித்த பெண் மீது வயிற்றுப் பகுதியில் இரு குத்து விழுந்துள்ளதுடன் இரண்டாவது குத்தினை மேற்கொண்ட கத்தியினையும் அகற்றாது கொள்ளையா். தப்பிச் சென்றுள்ளனர். இதனால் கத்திக் குத்திற்கு இலக்கான பெண் வீதியில் வீழ்ந்து கிடந்துள்ளார்.

குறித்த சமயம் பூநகரி வீதியால் பயணித்த  மீன் வியாபாரி ஒருவா் அதனை அவதானித்து உடனடியாக பொலிசாருக்கும் நோயாளர் காவு வண்டிக்கும் வழங்கிய தகவலின் பிரகாரம் மேற்படி பெண் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments