துருக்கியில் 2000 பேருக்கு ஆயுள் தண்டணை வழங்கியது நீதிமன்று!!

துருக்கி நாட்டின் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகனுக்கு எதிராக கடந்த 2016-ம் ஆண்டில் நடைபெற்ற இராணுவ புரட்சியில் ஈடுபட்ட  இராணுவ அதிகாரிகள், வீரர்கள், நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நடைபெற்றன. விசாரணைகளின் முடிவில் 2000 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்குவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

இவர்களில் 1934 பேர் தங்கள் ஆயுள் முழுவதும் சிறையில் தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 938 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறித்த இராணுப் புரட்சியை பொதுமக்கள் உதவியுடன் அதை அதிபர் எர்டோகன் முறியடித்தார்.

No comments