யாழில் சமாதானப் புறா விட்ட போர்க்குற்றவாளி சவேந்திரடிசில்வா
இறுதிக்கட்டப் போரின் போது போர்க்குற்றங்களை இழைத்தார் என்று கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்தில் நேற்று இன நல்லிணகத்துக்காக சமாதானப் புறாபறக்க விட்டார்.
போரால் மாற்றுத் திறனாளியாக ஆக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவர் சிறப்புத் தேவையுடையவர்களுக்கான சைக்கிளில் வடக்குக்கும், தெற்குக்குமிடையிலான ஒற்றுமையை வலியுறுத்திய பவனி ஒன்றை மேற்கொண்டார். தென்முனையில் அரம்பிக்கப்பட்ட அவரின் பவனி 7 நாள்களாக நடைபெற்று வடமுனையான பருத்தித்துறை முனையில் நேற்று நிறைவடைந்தது. நிறைவு நிகழ்வு பருத்தித்றை முனையில் இடம்பெற்றது.
அதில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் நிகழ்வில் கலந்து கொண்டார். நிகழ்வில் சமானத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்திய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சமாதானத்தை வேண்டி சமாதானப் புறாவைப் பறக்க விட்டார். இந்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி ஹெட்டியாராட்சி, பருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகர், காங்கேசன் துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், கடற்படைப் பொறுப்பதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலகங்களின் செயலர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்பில் இறுதிக்கட்டப் போரின் போது போர்க்குற்றங்களை இழைத்தார் என்று கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவு நீதிவான் மன்றில் தொடுக்கப்பட்ட ஆள்கொணர்வு மனுவிலும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஆராய்ந்த ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுஉறுப்பினர் யஸ்மின் சூக்கா, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இறுதிப் போர்க் காலத்தில் போர்க்குற்றம் புரிந்தார் என்று குற்றம் சுமத்தியிருந்தார்.
போரால் மாற்றுத் திறனாளியாக ஆக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவர் சிறப்புத் தேவையுடையவர்களுக்கான சைக்கிளில் வடக்குக்கும், தெற்குக்குமிடையிலான ஒற்றுமையை வலியுறுத்திய பவனி ஒன்றை மேற்கொண்டார். தென்முனையில் அரம்பிக்கப்பட்ட அவரின் பவனி 7 நாள்களாக நடைபெற்று வடமுனையான பருத்தித்துறை முனையில் நேற்று நிறைவடைந்தது. நிறைவு நிகழ்வு பருத்தித்றை முனையில் இடம்பெற்றது.
அதில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் நிகழ்வில் கலந்து கொண்டார். நிகழ்வில் சமானத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்திய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சமாதானத்தை வேண்டி சமாதானப் புறாவைப் பறக்க விட்டார். இந்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி ஹெட்டியாராட்சி, பருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகர், காங்கேசன் துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், கடற்படைப் பொறுப்பதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலகங்களின் செயலர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்பில் இறுதிக்கட்டப் போரின் போது போர்க்குற்றங்களை இழைத்தார் என்று கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவு நீதிவான் மன்றில் தொடுக்கப்பட்ட ஆள்கொணர்வு மனுவிலும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஆராய்ந்த ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுஉறுப்பினர் யஸ்மின் சூக்கா, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இறுதிப் போர்க் காலத்தில் போர்க்குற்றம் புரிந்தார் என்று குற்றம் சுமத்தியிருந்தார்.
Post a Comment