ஜதேக கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் கிளிநொச்சியில்!


தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் ஜக்கிய தேசிய முன்னணி கூட்டின் முதலாவது கூட்டு அமைச்சரவை கூட்டம் கிளிநொச்சியில் இன்று வெள்ள அனர்த்தம் பற்றி கூட்டம் நடத்தியுள்ளது.

அண்மையில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளது. அந்தவகையில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட  முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி  மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் கூட்டமைப்பின் கோரிக்கையின் பேரில் இன்று நடைபெற்றிருந்தது.

இலங்கை நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கிளிநொச்சி  மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் குறித்த கூட்டம் இடம்பெற்றிருந்தது.
கடந்த 21 ஆம் திகதி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இரு மாவட்டங்களும்  பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளது அந்தவகையில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட  முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி  மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் இலங்கை நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கிளிநொச்சி  மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில்  அமைச்சர்களான றிசாட் பதியூதீன், ரஞ்சித் மத்தும பண்டார, தயாகமகே,அலவத்துவல,இராஜாங்க அமைச்சர்களான விஜயகலா மகேஸ்வரன், ஹரிசன் டீ சில்வா,பங்காளிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்,மாவை சேனாதிராசா,செல்வம் அடைக்கலநாதன்,டக்ளஸ் தேவானந்தா, சரவணபவன், சாந்தி சிறீஸ்கந்தராஜா,சிவஞானம் சிறீதரன், சாள்ஸ்நிர்மலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவமோகன்  காவல்துறை அதிபர்;,இராணுவ உயர் அதிகாரிகள், கிளிநொச்சி ,முல்லைத்தீவு அரச அதிபர்கள்  திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதனிடையே மைத்திரி விசுவாசியான வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரே முதலாவது நபராக முன்னின்று ரணிலை வரவேற்பதில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments