மைத்திரி கோரியே அமைச்சரானேன்:வியாழேந்திரன்!


இப்போது அல்ல எப்போதும் உயிருள்ளவரை ஜக்கிய தேசியக்கட்சியில் சேரும் எண்ணம் தனக்கில்லை முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். சிலர் அவமானப்படுத்தும் நோக்கிலும் தங்களை பிரபலபடுத்தும் நோக்கிலும் பொய்யான செய்திகளை பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் எனது கிழக்கு தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நல் நோக்கில் தான் பிரதி அமைச்சை பொறுப்பெடுத்தேன். கிழக்கில் தமிழர்கள் இனம் மாற்றம் செய்யப்படுகிறார்கள்.நில வளம் சூறையாடப்படுகிறது. இல்லை என்று யாராவது பகிரங்கமாக சொல்லட்டும். அந்த மக்களை காப்பாற்ற வேண்டியது எம் பொறுப்பு.தற்போதைய சூழலில் நான் எடுத்து பதவியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பதவி இல்லாவிட்டாலும் நான் ஜனாதிபதியிடம் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஜனாதிபதி உடன் தொடர்ந்து பேசுகிறேன்.அதில் எதுவித மாற்றமும் இல்லை. 

அதற்காக ஜனாதிபதி இல்லாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சியுடன் சேரப்போறேன் என்ற கதை மிகக் கேவலமானது . அத்தகைய வேலையை கனவிலும் நினைத்து பார்க்கமாட்டேன்.அரசியலில் எந்த தோல்வியும் நிரந்தரமானதல்லதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments