வவுணதீவு சூடு: திரிபுபடுத்தப்படுகின்றதென்கிறார் சாள்ஸ்!

மட்டக்களப்பு வவுணதீவு துப்பாக்கி சூட்டை கருணாவே செய்ததாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் உண்மையான குற்றவாளிகள் இனம் கானப்படவேண்டியதே அவசியமானது. மாறாக அச் சூழலைப்பயன்படுத்தி அசாதாரண நிலமையை தோற்றுவிக்க முயல்வதாக தோன்றுகின்றதென கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் சாஸ்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயத்தை மாறாக திசை திருப்பல் அல்லது திரிவுக்கு உட்படுத்தி அசாதாரண நிலமையின் மூலம் சிலர் இலாபமடைய எண்ணும் திட்டத்திற்கு இடமளித்துவிடக்கூடாது. இதனால் உண்மையான குற்றவாளிகள் தப்பவிடப்பட்டு முன்னாள் போராளிகள் இலக்கு வைக்கப்படுவதாக முன்னாள் போராளிகள் அஞ்சுகின்றனதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் அனுப்பி வைத்துள்ள கடிதத்தினில் நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண நிலமையை பயன்படுத்தி நிலைமையை மேலும் மோசமாக்கும்; நோக்கில் உண்மை நிலைமை திசை திருப்பப்படுவதுபோல் எண்ணத் தோன்றுகின்றது. எனவே வவுணதீவு கொலைச் சம்பவம் தொடர்பில் உண்மை நிலையை உடன் கண்டறியப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

No comments