குப்பை மேட்டில் வீசப்பட்ட குழந்தை! சடலமாக மீட்பு!

பியகம – மல்வானை பிரதேசத்தில் வீதியோரக் குப்பை மேடொன்றில் இருந்து ஆறு மாதங்கள் மதிக்கத்தக்கதான குழந்தை ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காவல்துறையினருக்கு  கிடைத்த தகவலுக்கு அமையவே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குழந்தையின் பெற்றோர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மெற்கொண்டு வருகின்றனர்.

#Baby 

No comments