தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அமைச்சரானார்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாலேந்திரன் கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இன்று பிற்பகலில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற குறித்த பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் வியாழேந்திரன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.


இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி நாவின்ன கலாசார அலுவல்கள், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

புளொட் அமைப்பினைச் சேர்ந்த  வியாழேந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஊடாக  மட்டக்களப்பு மாவட்ட தேர்தலில் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments