தடை:அதை உடை!


தமிழீழ மாவீரர் நாள் அண்மித்தாலே தெற்கிலுள்ளவர்களிற்கு கிடுகிடுப்பது வழமையானதொன்றே.போராட்ட அரங்கிலிருந்து விடுதலைப்புலிகள் வெளியேற்றப்பட்டாலும் மாவீரர் நாள் அண்மிக்கின்ற போது முப்படைகள் முதல் ஆட்சியாளர்கள் ஈறாக தயார் நிலையிலிருப்பது வழமை.

அவ்வகையில் தமிழீழ மாவீரர் நாள் அனுஸ்ட்டிப்புக்கு அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்கவில்லையென இலங்கை அரச தகவல் திணைக்களம் அவசர அவசரமாக ஊடக அறிக்கையொன்றை இன்று விடுத்துள்ளது.

ஏற்கனவே இலங்கை நீதிமன்றம் புலிநீக்க மாவீரர் நாளிற்கு அனுமதித்துள்ள போதும் மக்கள் நீதிமன்ற அறிவிப்பினையோ அல்லது அரச அறிவிப்பினையோ கடந்த காலங்களில் பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லையென்பது தெரிந்ததே. 

No comments