வடமாகாணசபையின் இறுதி செயற்பாட்டு அமர்வு இன்று!
வடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வு, கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நிர்வாக ரீதியாக செயற்படக்கூடிய இறுதி அமர்வாக இன்று நடைபெறவுள்ளது. தீர்மான வரைவுகள், கேள்விகள், குறைநிரப்பு பாதீடு என்பன இன்றைய அமர்வில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறும் அமர்வு சம்பிரதாயபூர்வ அமர்வாகவே நடைபெறவுள்ளது.
இன்றைய அமர்விலேயே, தீர்மான வரைவுகள், வாய்மூல வினாக்கள் என்பன எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. மேலும் குறைநிரப்பு பாதீடும் இன்றைய அமர்வில் சமர்பிக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் 2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்றது. மாகாணசபையின் முதலாவது அமர்வு அதே ஆண்டு ஒக்ரோபர் மாதம் 25ஆம் திகதி இடம்பெற்றது. எதிர்வரும் 25ஆம் திகதியுடன் மாகாணசபையின் பதவிக் காலம் நிறைவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய அமர்விலேயே, தீர்மான வரைவுகள், வாய்மூல வினாக்கள் என்பன எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. மேலும் குறைநிரப்பு பாதீடும் இன்றைய அமர்வில் சமர்பிக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் 2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்றது. மாகாணசபையின் முதலாவது அமர்வு அதே ஆண்டு ஒக்ரோபர் மாதம் 25ஆம் திகதி இடம்பெற்றது. எதிர்வரும் 25ஆம் திகதியுடன் மாகாணசபையின் பதவிக் காலம் நிறைவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment