விக்கினேஸ்வரன் குறித்த கேள்விக்கு சீறிப் பாய்ந்தார் சம்பந்தன்


வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயாில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துமை குறித்து எழுப்பட்ட கேள்விக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தன் கோபமடைந்துள் ளாா்.

மேலும் சீ.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சி தொடா்பாகவும், அங்கு தொிவித்த கருத்துக்கள் தொடா்பாகவும் உாிய பதிலை நேரம் வரும்போது கூறுவேன் அதுவரை அனைவரும் அமைதியாக இருங்கள் எனவும் இரா.சம்மந்தன் கூறியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீ.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சி ஆரம்பம் குறித்து ஊடகங்கள் இரா.சம்மந்தனிடம் வினவியபோதே சம்மந்தன் மேற் படி பதிலை காட்டமாக கூறியுள்ளதாக கூறப்படுகின்றது.  இதன்போது சம்மந்தன் மேலும் கூறுகையில்,

விக்னேஸ்வரனின் புதிய கட்சி அறிவிப்புத் தொடர்பான தகவலை அறிந்தேன். அவர் ஆற்றிய உரையை நான் இன்னமும் பார்க்கவில்லை. அதன் பின்னர் அது தொடர்பில் உரிய பதிலளிப்பேன் என்றார்.

No comments