பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக 8 மனுக்கள்


பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 8 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்று (25) அறிவித்துள்ளார்.

இதேவேளை, இழப்பீடுகளுக்கான எதிரீடுகள் சட்டமூலத்திற்கு தாம் கையொப்பம் இட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் பிரதிகள் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய சபை அமர்வு இன்று முற்பகல் 10. மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது, சபாநாயகரின் அறிவிப்புகள் முன்வைக்கப்பட்டபோதே, சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

No comments