தமிழ் மக்கள் கூட்டணியில் தமிழரசும் இணையலாம்!


தனது கொள்கையுடன் ஒத்துப்போனால் தமிழ் அரசுக் கட்சியும்கூடத் தனது கூட்டணியில் இணைந்து கொள்ளலாமென முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காரைநகர் பிரதேச சபையின் கசூரினா சுற்றுலா மையத்தில் முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகக் கட்டடதிறப்புவிழா நேற்றுமாலை இடம்பெற்றிருந்தது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண சபையின் முன்னாள் புளொட் சார்பு உறுப்பினரான கஜதீபன் தற்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தரப்புகளுக்குள் பிளவுகள் ஏற்படக்கூடாது என்று வலியுறுத்தினார்.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் விக்னேஸ்வரனும் முரண்படுவதால் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை.ஆனனகால் தமிழ் இனம் தான் பெரும் பிரச்சினையை எதிர்கொள்ளப் போகின்றதென தெரிவித்து இணைந்து செயற்பட அழைப்புவிடுத்திருந்தார்.

தனது உரையில் அதற்குப்பதிலளித்த சி.வி.விக்னேஸ்வரன், தமிழரசு கட்சியின் வரலாற்று துரோகங்களை எடுத்து கூறியதுடன் இனிமேலாவது தமது கொள்கையுடன் ஒத்துப்போனால் தனது கூட்டணியில் தமிழரசுக்கட்சியை இணைத்துக்கொள்ளலாமென தெரிவித்துள்ளார்.

No comments