ஊடகச் செய்திகள் பொய் என்கிறார் இந்திய வெளிவிவகார பேச்சாளர்
தம்மைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்தில் இந்தியப் புலனாய்வு அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர்,
“மூன்று அறிக்கைகளின் மூலம் இது நிராகரிக்கப்பட்டுள்ளது . ஊடகச் செய்திகள் பொய்யானவை.
சிறிலங்காவில் எல்லா அரசியல் கருத்துக்களும், இந்தியாவுடனான நெருக்கமான உறவுகளுக்கு அழைப்பு விடுக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment