ஈகப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

ஈழத்தமிழர்களின் விடியலுக்காக தீயினில் தன்னையே ஆகுதியாக்கிய ஈகப்பேரொளி இரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்களின் நினைவு சுமந்த ஐந்தாம் ஆண்டு  வணக்க ஒன்றுகூடல் 05.09.2018  புதன்கிழமை  இரவு 19 .30 மணிக்கு  முருகதாசன் திடலில் நடைபெற்ற உள்ளது. அனைத்து தமிழ் உறவுகளையும் ஈகப்பேரொளி செந்தில்குமரன் நினைவு சுமந்து வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.


அத்துடன்  எதிர்வரும் 17.09.2018  திங்கடகிழமை    ஐ.நா  முன்றலில்  ஈகப்பேரொளி  முருகதாசன் திடலில் தமிழின  இனவழிப்பிற்கு நீதிகேட்டு பொங்குதமிழ் பேரணிக்கும்     அனைவரும் அணிதிரளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

-சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-


No comments