வாக்கு பிச்சையில் தமிழரசு முனைப்பு?


சத்தம் சந்தடியின்றி மாவட்டங்கள் தோறும் தமது வாக்கு வங்கிகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அவ்வகையில் திருகோணமலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட சிறிசர பிவிசும அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஊடாக நிறைவு செய்யப்பட்ட திட்டங்களை மைத்திரியை அழைத்து கையளிக்க வைத்துள்ளார் சம்பந்தன்.

இந்நிகழ்வில் பிளவடையாத நாட்டிற்குள் சகல மக்களும் அபிவிருத்தியின் வரப்பிரசாதங்களை பெற்று சமாதானத்துடனும் ஒற்றுமையாகவும் வாழக்கூடிய நாட்டை உருவாக்கக்கூடிய தலைமைத்துவம் தற்போது நாட்டில் காணப்படுவதாக இரா.சம்பந்தன் கருத்து தெரிவித்திருந்தார்.

அத்துடன் நாட்டில் வறிய மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் இத்தகைய அபிவிருத்தி செயற்திட்டத்தை அன்று நாட்டில் அவதானிக்க முடியாது போனது. இந் நிலைiயில் தற்போது இடம்பெற்றுவரும் இந்த அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு சகலரது ஒத்துழைப்பும் கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனி;டையே யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் சத்தம் சந்தடியின்றி சிறிசர பிவிசும அபிவிருத்தி செயற்திட்டத்தினை முன்னிறுத்தி தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தம் சந்தடியின்றி செயற்பட்டுவருகின்றனர்.

திருகோணமலை நிகழ்வில் அமரபுர சிரி சத்தம்வங்ஷ மகா நிக்காயவின் மகா நாயக்கர், அஹ_ங்கல அமரபுர மகா சங்க சபையின் உப தலைவர் வண. அஹ_ங்கல சிரிசீல விசுத்தி நாயக்க தேரர், திருகோணமலை ஜயசுமணராம விகாராதிபதி வண. திரிகுணாமலேயே ஞானகித்தி தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகளும் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் எஸ்.ஏ. வீரசிங்க உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

No comments