முடியாவிட்டால் பதவி விலகுங்கள் என்கிறார் மகிந்த


ரூபாவின் மதிப்பிறக்கத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால் அரசாங்கம் உடனடியாக பதவிவிலக வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலமை தொடர்பில் தௌிவுபடுத்தும் நோக்கில் இன்று (22) காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டில் சரியான தலைமைத்துவம் இன்மையே இந்த பொருளாதார சிக்கலுக்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

தான் அரசாங்கத்தை ஒப்படைக்கும் ​போது அமெரிக்க டொலர் ஒன்று 131.40 ரூபாவாக இருந்ததாகவும் தற்போது அது 170 ரூபாவையும் தாண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரூபாவின் மதிப்பிறக்கத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால் அரசாங்கத்தை மீண்டும் ஒப்படைக்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநரும் உடனிருந்தனர்.

No comments