முல்லைதீவில் சரத்பொன்சேகா?


வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பினை பெருமளவில் எதிர்கொண்டுள்ள முல்லைதீவில் தொடர்புடைய அமைச்சர் சரத்பொன்சேகா பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

இன்று முல்லைத் தீவு கச்சேரியில் வனஜீவராசிகள் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் சரத் பொன்சேகா, பிரதியமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் பங்கேற்புடன் நடந்தது.

கச்சேரி கேட்போர் கூடத்தில் வனஜீவராசிகளால் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஷ்வரன் தலைமையில் வலுவாதார, வனஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

வனஜீவராசிகளால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் குறித்து இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகின்றது.

வனஜீவராசிகள் திணைக்களப் பணிப்பாளர் திரு.சூரியபண்டார,திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் எனப் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

No comments