தடுத்துவைத்த மீனவர்களை மீட்டுச் சென்ற பொலிசார் - வடமராட்சி கிழக்கில் பதற்றம்



வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டதாக அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடிக்கப்பட்ட  எட்டு மீனவர்களை பொலிசார் மீட்டுச் சென்றதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அப் பகுதியெங்கும் பெருமளவு பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கின் பல இடங்களிலும் தென்னிலங்கையைச் சேர்ந்த பெருமளவிலான மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் கடல் வளமும் அழிக்கப்படுவதால் இவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டுமென தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு போராட்டங்களும் நடைபெற்றிருக்கின்றன.
இதனையடுத்து கடற்தொழில் அமைச்சர் உள்ளிட்ட பல தரப்பினர்களும் அந்த மீனவர்களை வெளியேற்றுவது கூறியிருந்தார் போதிலும் அங்கு தொடர்ந்தும் அவர்கள் தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு வடமராட்சி கிழக்கின் தாளையடிப் பகுதியில் தங்கியிருந்து சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்களும் எட்டு மீனவர்கள் வடமராட்சி கடறபரப்பிற்கைள் நுழைந்து தொழிலில் ஈடுபட்ட போது வடமராட்சி மீனவர்களும் மடக்கி பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து அப் பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.  அங்கு வந்த பருத்தித்துறை பொலிஸாரும் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை கைது செய்து தாம் பொலிஸ் நிலையம் கொண்டு செல்ல முற்பட்ட போதும் அதற்கு அப்பகுதி மீனவர்கள் மறுப்புத் தெரிவித்தனர்.

மேலும் சட்ட விரோதமாகத தொழில்கள் நிறுத்தப்பட வேண்டுமென்றும் இந்த விடயத்தில் தமக்கு சாதகமான முடிவவை இதற்கான அமைச்சர் உள்ளிட்ட அரசியல்  தரப்பினர்கள் தெரியப்படுத்தும் வேண்டுமென்றும் அப் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்அதுவரையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மீனவர்களை விடுவிக்க முடியாதென்றும் கூறினர்.

எனினும் வடமராட்சி பருத்தித்துறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன மீனவர்களை தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென பொலிஸாரும் கோரிக்கை விடுத்தவாறிருந்தனர்.

ஆனாலும் அந்த மீனவர்களை பொலிஸாரும் ஒப்படைக்க முடியாதென்றும் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் மீனவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையில் அங்கு வந்த காங்கேசன்துறை துறை பொலிஸ் அத்தியட்சகர் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்காவிட்டால் விசேட அதிரடிப்படையின் களமிறக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தத நிலையில் திடிரென தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்களை பொலிஸார் அழைத்துச்சென்றனர் .

இதனால் மேலும் குழப்பம் அதிகரித்ததுடன் பொலிஸ் மற்றும் அப் பகுதி மீனவர்களுக்கிடையே முரண்பாடுகளும் ஏற்பட்டு பதற்றமானதொரு சூழல் நிலவியது.

இதேவேளை தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு பேர்களில் ஆறு பேரை பலவந்தமாக. பொலிஸார் மீட்டுச் சென்றனர் .

ஏனைய இரண்டு பேரையும் பொலிஸாரால் மீட்க முடியவில்லை. இதனையடுத்து அங்குள்ள அருட்தந்தை ஒருவர் மூலமாக ஏனைய இரண்டு பேரையும் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதேவேளை அங்கு நின்ற அப் பகுதி மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸாரும் பலரும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்துள்ளதோடு அவர்களை மிரட்டியதாக தெரியவந்துள்ளது.

No comments