மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது முதலமைச்சரது அவமதிப்பு வழக்கு!


வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிற்க எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மீண்டும் விசாரணை ஒக்டோபர் 18ம் திகதிக்கு தவணையிடப்பட்டிருந்தது.
முன்னாள் அமைச்சா பா.டெனீஸ்வனிற்கு எப்படியேனும் அமைச்சு பதவி பெற்றுக்கொடுக்க சுமந்திரன் அணி மும்முரமாக உள்ள நிலையில் இன்றைய அமர்வில் முதலமைச்சரிற்கு எதிரான குற்றப்பத்திரம் வாசிக்கப்படலாமென எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
எனினும் வழக்கின் நியாயாதிக்க எல்லை தொடர்பில் முதலமைச்சர் தரப்பு எழுப்பிய கேள்வியினையடுத்தே வழக்கு மீண்டும் ஒக்டோபர் 18ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே எதிர்வரும் ஒக்டோபர் 25ம் திகதியுடன் வடமாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments