கழுத்து வெட்டப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதி! பருத்தித்துறை தும்பளையில் பரபரப்பு!
பருத்தித்துறை, துப்பளைப் பகுதியில் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு, படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் தைத்துக் கொண்டிருந்த பெண்ணின் பின்புறமாக உள்நுழைந்த மர்மநபர் கழுத்தை வெட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
படுகாயமடைந்த சத்தியசோதி சிறிகௌசி (வயது 48) பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
தும்பளைப் பகுதியில் பிள்ளையுடன் வசித்து வரும் சிறிகௌசி தனது வீட்டில் தைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்பக்கமாக வந்த மர்ம நபர் ஒருவர் அவருடைய வாயினை பொத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மர்மநபரின் பிடியிலிருந்து தப்பப் போராடினார்.
கூக்குரல் எழுப்பினார். இதனால் பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்று பொலிஸில் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த சிறிகௌசிக்கு கழுத்தில் 12 தையல் கள் போடப்பட்டுள்ளன. பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வீட்டில் தைத்துக் கொண்டிருந்த பெண்ணின் பின்புறமாக உள்நுழைந்த மர்மநபர் கழுத்தை வெட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
படுகாயமடைந்த சத்தியசோதி சிறிகௌசி (வயது 48) பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
தும்பளைப் பகுதியில் பிள்ளையுடன் வசித்து வரும் சிறிகௌசி தனது வீட்டில் தைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்பக்கமாக வந்த மர்ம நபர் ஒருவர் அவருடைய வாயினை பொத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மர்மநபரின் பிடியிலிருந்து தப்பப் போராடினார்.
கூக்குரல் எழுப்பினார். இதனால் பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்று பொலிஸில் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த சிறிகௌசிக்கு கழுத்தில் 12 தையல் கள் போடப்பட்டுள்ளன. பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment