கழுத்து வெட்டப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதி! பருத்தித்துறை தும்பளையில் பரபரப்பு!

பருத்தித்துறை, துப்பளைப் பகுதியில் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு, படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்­டில் தைத்­துக் கொண்­டி­ருந்த பெண்­ணின் பின்புறமாக உள்நுழைந்த  மர்மநபர் கழுத்தை வெட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

படு­கா­ய­ம­டைந்த சத்­தி­ய­சோதி சிறி­கௌசி (வயது 48) பருத்­தித்­துறை வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

தும்­ப­ளைப் பகு­தி­யில் பிள்­ளை­யு­டன் வசித்து வரும் சிறி­கௌசி தனது வீட்­டில் தைத்­துக் கொண்­டி­ருந்­தார்.

அப்­போது அவ­ருக்கு பின்­பக்­க­மாக வந்த மர்ம நபர் ஒரு­வர் அவ­ரு­டைய வாயினை பொத்­தி­யுள்­ளார்.

இத­னால் அதிர்ச்சி அடைந்த பெண் மர்­ம­ந­ப­ரின் பிடி­யி­லி­ருந்து தப்­பப் போரா­டி­னார்.

கூக்­கு­ரல் எழுப்­பினார். இத­னால் பெண்­ணின் கழுத்தை கத்­தி­யால் அறுத்­து­விட்டு மர்ம நபர் அங்­கி­ருந்து தப்­பிச் சென்­றுள்­ளார் என்று பொலி­ஸில் முறைப்­பாட்­டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

படு­கா­ய­ம­டைந்த சிறி­கௌ­சிக்கு கழுத்­தில் 12 தையல் கள் போடப்­பட்­டுள்­ளன. பருத்­தித்­துறை பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.

No comments