வவுனியாவில் மீட்கப்பட்ட இருப்புப் பெட்டகம்

வவுனியா மரக்காரம்பளைப் பகுதியில் இரும்பெட்டகம் ஒன்று மீட்கப்பட்டது. நேற்று மரக்காரம்பளைப் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்தே மீட்கப்பட்டது.
இனம் தெரியாத நபர்களால் நிலத்தைத் தோண்டும் போதே பெட்டகம் மீட்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இரும்பு பெட்டகம், அதனை தூக்கிச் செல்லப் பயன்படும் சட்டகம் ஒன்றையும் மீட்டுள்ளனர். எனினும் குறித்த பெட்டகத்தில் என்ன இருந்தது என்ற தகவல் வெளியாகவில்லை.

நேற்று இரவு பொலிசாரின் அவரச தொலைபேசி அழைப்புக்குக்கிடைத்த தகவல் அடிப்படையில் சென்ற பொலிசார் மரக்காரம்பளை பகுதியிலிருந்து கைவிடப்பட்ட இரும்பு பாதுகாப்புப் பெட்டகம் ஒன்றினை மீட்டுள்ளனர்.

முற்றிலும் மூடப்பட்ட நிலையிலிருந்து மீட்கப்பபட்ட இரும்புப் பெட்டகத்தினுள் பொருட்கள் எவையும் மறைத்து வைக்கப்பட்டிருகலாம் என்றும் புதையல் தோண்டும் நபர்களினால் இது மீட்கப்பட்டிருக்கலாம் அதனை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றல் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments