வவுனியா வீதியில் எழுதப்பட்ட புலிகளின் எழுச்சிப் பாடல் வரியால் பரபரப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப்பாடலான ''நித்திரையா தமிழா'' என்ற பாடலின் வரியை வீதியில் எழுதியதால் வவுனியா பூம்புகார் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இனம்தொியாதவர்களால் வீதியில் எழுதப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்களால் காவல்துறைக்கு அறவிக்கப்பட்ட பின்னர் குறித்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

No comments