நிதி மோசடி விசாரணைப் பிரிவில் கோத்தபாய ஆஜர்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று காலை முன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு ஆஜராகியுள்ளார்.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா பொது மக்களின் பணத்தைப் பயன்படுத்தியதாக, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு ஆஜராகியுள்ளார்.

No comments