கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் விடிய விடிய தேடுதல் நடவடிக்கை


கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். இன்று அதிகாலை வரை தேடுதல் தொடர்ந்துகொண்டிருந்ததாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

வெடிபொருட்கள் மற்றும் புலிகளின் சீருடை கொண்டுசென்றனர் என்ற குற்றச்சாட்டில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களுள் கிளிநொச்சி சாந்தபுரத்தை சேர்ந்த ஏகாம்பரம் என்பவரையும் பொலிஸார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர்  வன்னிவேளாங்குளம் பகுதியில் வைத்து அவரும் பொலிசாரால் கைது செய்திருந்தனர்.

அதன் பிறகு கிளிநொச்சி சாந்தபுரம் பகுதிக்கு பொலிஸார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அவர் அழைத்து வரப்பட்டிருந்தார். மேலும், குறித்த பகுதியில் தொடர்ந்தும் ஆயுதங்கள் இருக்கலாம் என தேடுதல் நடைபெற்று வருகின்ற நிலையில், அந்த பகுதிக்கு இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இதுவரையில் எவ்வித ஆயுதங்களோ, வெடிபொருட்களோ மீட்கப்படாத நிலையில்  சந்தேகநபர்கள் வழங்கிய வாக்குமூலங்களுக்கு அமைவாக அப்பகுதியில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

No comments