மீனவர்கள் போராட்டம்: கூட்டமைப்பினை காணவில்லை!


வடமராட்சி கிழக்கிலிருந்து தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளனம்; மற்றும் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சம்மே ளனம் ஆகியன இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளன.

குறித்த மீனவ அமைப்புக்களது போராட்டத்தில் அழையாவிருந்தாளியாக வந்திருந்த தமிழரசுக்கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா போராட்டகாரர்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தென்னிலங்கை மீனவர்களிற்கு முண்டுகொடுத்தவாறு கண்துடைப்பிற்கு இங்கு வருகை தந்தீர்களாவென கேள்வி எழுப்பியே மாவை
விரட்டப்பட்டிருந்தார்.

முன்னதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் முன்னதாக இடம்பெற்ற போராட்டத்தில் வாரிசு அரசியலில் வளர்த்துவரும் தனது மகனை மாவை அழைத்துவந்திருந்தார்.

வடமராட்சி கிழக்கு பகுதியில் சுமார் 1500ற்கும் மேற்பட்ட தென்பகுதி மீனவர்கள் அடாத்தாக தங்கியிருந்து கடலட்டை தொழிலை செய்து வருகின்றனர். இதனை வடமராட்சி கிழக்கு மீன வர்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று காலை 9.30 மணிக்கு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத் தின் முன்பாக கூடிய பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் பிரதான வீதி வழியாக யாழ்.மாவ ட்ட செயலகத்தை அடைந்து மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியிருந்ததுடன் தென்பகுதி மீனவர்களை உடன் வெ ளியேற்றக்கோரி யாழ்.மாவட்ட செயலருக்கு மகஜர் ஒன்றை கையளித்தனர். 

இதனை தொடர்ந்து வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு சென்ற மீனவர்கள்,ஆளுநர் அலுவலகம் முன்பாகவும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியதுடன், ஆளுந ரின் இணைப்பு செயலாளர்களிடம் ஆளுநருக்கான மகஜர் ஒன்றிணை கையளித்திருந்தனர். 


No comments