வாய் திறந்தார் வடக்கு கல்வி அமைச்சர்!

சிறுமியின் கொலையில் சம்பந்தப்பட்டகொலையாளிகள் தண்டிக்கப்படவேண்டுமென வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை,இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் கோரியுள்ளார். பாடசாலை மாணவி சிவனேஸ்வரன் ரெஜினாவின் படுகொலை தொடர்பாக வெளியிட்ட பத்திரிகைச் செய்திக் குறிப்பில் சுழிபுரம் காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்விகற்றுக் கொண்டிருந்த மாணவி சிவனேஸ்வரன் ரெஜினா பாடசாலையில் இருந்து வீட்டுக்கு வந்ததன் பின்னர்,ஏமாற்றிஅழைத்துச் செல்லப்பட்டு,படுகொலைசெய்யப்பட்டார். ஆறு வயதுச் சிறுமிக்கு நேர்ந்த இக் கதியானது மிகுந்த அதிர்ச்சியையும்,கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த மிலேச்சத்தனமான படுகொலைதொடர்பில் பொலிசார் விரைந்து செயற்பட்டுக் கொலையாளிகளையும் ,சூத்திதாரிகளையும் கைது செய்திருப்பதன் மூலம் தமது கடமையைச் சரிவரசந்செய்து கொண்டிருப்பதை அறியமுடிகின்றது. இத்தகைய துன்பகரமான சம்பவங்கள்,எதிர்காலத்தில் நிகழாது இருக்க,சிறுபிள்ளைகள் தொடர்பானபெற்றோர்களின் விழிப்புனர்வு,அவசியமானதாகும். 

எனினும் எதிர்காலத்தில் சிறுவர்களுக்கு இத்தகையஆபத்துக்கள் ஏற்படுவதைக் குறைக்கக் கூடியவகையில் வடமாகாணக் கல்விஅமைச்சு தனது வரையறைகளுக்குள்,நடவடிக்கைகள் மேற் கொள்வதற்குத் தீர்மானித்துள்ளது என்ற வகையில் வடக்குமாகாணத்தின்,பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளில்; கல்விகற்கும் மாணவர்களை,பாடசாலை முடிந்ததும் பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களினால் பெயர் குறிப்பிடப்பட்டு நியமிக்கப்பட்டவர்களோ மட்டுமே வந்து அழைத்துச் செல்லவேண்டும் என்ற நடைமுறையைச் செயற்படுத்தத் தீர்மானித்துள்ளோம்.இது எதிர்காலத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு நடைமுறையாகவும் இருக்கும்.

இவ்வேளையில் இச் சிறுமியின் படுகொலைதொடர்பில்,காவல்துறையினர் நடுநிலையுடனும்,நீதியாகவும் செயற்பட்டு அனைத்துக் குற்றவாளிகளையும் நீதிமன்றத்தில் நிறுத்தி,உரியதண்டனையைப் பெற்றுக் கொடுக்கும் கடமையைக் கூடிய விரைவில்  நிறைவேற்றவேண்டும் என வடமாகாணக் கல்வி அமைச்சு கேட்டுக் கொள்கின்றது. எதிர்காலத்தில் இத்தகையதவறுகள் நிகழாதிருக்க,பொலிசாரினதும்,நீதிமன்றத்தினதும் இக் குற்றவாளிகள் மீதான நடவடிக்கையானது இத்தகையவர்களுக்கு ஒரு பாடமாகவும் இருக்கவேண்டுமெனவும் அமைச்சர் கோரியுள்ளார். 

No comments