கூட்டமைப்பின் புதிய நாடகத்தொடர் ஆரம்பம்


ரணிலுக்கு எதிரான விடயத்தில் தாம் மீண்டும் சம்பந்தன் மற்றும் சுமந்திரனால்; ஏமாற்றப்பட்டுள்ளதாக கூட்டமைப்பினர் நாடகமொன்றை அரங்கேற்ற தொடங்கியுள்ளனர்.மக்களிடையே மீண்டும் கிடைத்த சந்தர்ப்பமொன்றை தவறவிட்டுவிட்டதாக மக்களிடையே கோபம் கிளம்ப தொடங்கியுள்ளது.இதிலிருந்து தப்பிக்க புதிய நாடகத்தை அரங்கேற்ற கூட்டமைப்பின் வெள்ளையடிக்கும் பிரிவு பணிகளை தொடங்கியுள்ளது.குறிப்பாக தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தனது ஊடகம் மூலம் புதிய கதைகளை அரங்கேற்ற தொடங்கியுள்ளார்.

அக்கதையில் ரணி­லு­டன் எழுத்­து­மூ­ல­மான எந்­த­வொரு ஒப்­பந்­த­மும் செய்­யப்­ப­ட­வில்லை என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் தெரி­வித்த கருத்­தால், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டையே குழப்­பம் ஏற்­பட்­டுள்­ளது.
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம் கடந்த 3ஆம் திகதி இடம்­பெற்­றது. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான  நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் தொடர்­பில் ஆரா­யப்­பட்­டது. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நேரில் சந்­தித்து அன்­றைய தினம் 10 கோரிக்­கை­களை கூட்­ட­மைப்பு முன்­வைத்­தி­ருந்­தது. அந்­தக் கோரிக்­கை­க­ளுக்கு தலைமை அமைச்­சர் எழுத்­தில் பதில் வழங்­க­வேண்­டும் என்­றும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கோரி­யி­ருந்­தது.
மறு­நாள் 4ஆம் திகதி அன்று, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம் நடை­பெற்­றது. கட்­சி­யின் தலை­வர் இரா.சம்­பந்­தன், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டம் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கை­க­ளுக்கு எழுத்­து­மூ­லம் பதில் அளித்­தி­ருப்­ப­தா­கத் தெரி­வித்து ஓர் ஆவ­ணத்தை கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டம் காண்­பித்­தார்.
இந்த நிலை­யில் யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­வித்த, கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பினை சேர்ந்த நாம் நிறை­வேற்ற வேண்­டிய முக்­கி­ய­மான பத்து விட­யங்­களை ரணி­லுக்­குச் சுட்­டிக் காட்­டி­னோம். அதனை அவர் நிறை­வேற்­று­வ­தாக கூறி­னார். ஆனால் இது தொடர்­பாக நாம் அவ­ரு­டன் எழுத்து மூல­மான ஒப்­பந்­தங்­கள் எவற்­றை­யும் செய்து கொள்­ள­வில்லை என்று குறிப்­பிட்­டார்.
இது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டம் வின­வி­ய­போது, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கையெ­ழுத்­திட்­ட­தா­கத் தெரி­வித்து ஓர் ஆவ­ணம், நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டத்­தில் எமக்­குக் காண்­பிக்­கப்­பட்­டது. அதனை கட்­சி­யின் தலை­வர் இரா.சம்­பந்­தனே காண்­பித்­தார். அதன் பிரதி எமக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் கூறு­வது உண்­மை­யாக இருந்­தால், சம்­பந்­தன் எங்­களை ஏமாற்­றி­விட்­டார். இதில் ஏதா­வது ஓர் விட­யம்­தான் உண்­மை­யாக இருக்க முடி­யும்.
தலைமை அமைச்­ச­ரி­டம் கோரிக்கை முன்­வைத்த விட­யம், அவர் கையெ­ழுத்­திட்ட விட­யத்தை வெளி­யில் எந்­தக் கார­ணத்­துக்­கா­க­வும் கூற­வேண்­டாம் என்று நாம் கட்­சித் தலை­மை­யால் திரும்­பத் திரும்ப அறி­வு­றுத்­தப்­பட்­டோம். இந்த விட­யம் தெரி­ய­வந்­தால், ரணி­லுக்கு சிங்­க­ளத் தரப்­பி­லி­ருந்து சிக்­கல் ஏற்­ப­டும். ரணில் இத­னைச் செய்யா விட்­டால், நாம் இத­னைப் பகி­ரங்­கப்­ப­டுத்­து­வோம் என்று கூட்­ட­மைப்­புத் தலை­மை­யி­னர் கூட்­டத்­தில் எமக்­குத் தெரி­வித்­த­னர். எதிர்­வ­ரும் வரவு – செல­வுத் திட்­டத்­துக்கு முன்­ன­தா­கவே இதில் பெரும்­பா­லான விட­யங்­கள் செய்து முடிக்­கப்­ப­டும் என்­றும், தலை­மை­யி­னால் எமக்­குத் தெரி­விக்­கப்­பட்­டது – என்று  கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

No comments