தேசிய அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதற்கு பின்னிற்க போவதில்லை


தேசிய அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதற்கு தாம் பின்னிற்க போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.
 
 யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனை குறிப்பிட்டார்.
 
இதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் தோல்வியை இனரீதியான முறையில் சித்திரிப்பதற்கு தெற்கிலே முயற்சிகள் இடம்பெறுவதாக சுமந்திரன் குற்றம் சுமத்தினார்.

இதேவேளை, தேசிய அரசாங்கத்தை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு மாற்றங்கள் இன்றி நடத்தி செல்லவுள்ளாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
 
வேயன்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஒன்றைந்தே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது.
 
எனவே அந்த அரசாங்கம் தொடர்ந்தும் கொண்டு நடத்தப்படும் எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்

No comments