காணி துப்பரவின் போது வெளிப்பட்ட விடுதலைப் புலிகளின் நிழக்கீழ் அறை?
பளை, அரசர்கேணியில் நிலக்கீழ் பதுங்கு குழி ஒன்று நேற்றுக்
கண்டுபிடிக்கப்பட்டது. காணியின் உரிமையாளர் நேற்றுக் காணியைத்
துப்புரவு செய்தபோதே நிலக்கீழ் பதுங்குழி தென்பட்டது.
இந்தப் பதுங்கு குழி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் பயன்படுத்தப்பட்டது என்று நம்பப்படுகின்றது. பதுங்கு குழி இருப்பது தொடர்பில் இராணுவத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.
பதுங்கு குழியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த இராணுவத்தினர், அதுவரை காணியில் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாம் என்று காணியின் உரிமையாளருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அங்கு சென்ற பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர் க.துர்சோதனன் பதுங்குழியை முழுமையாக அழிக்க வேண்டாம் என்று இராணுவத்தினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன் அடிப்பாகம் பெட்டி வடிவில் இருப்பதால் அதைத் துப்புரவு செய்துதரும் பட்சத்தில் தேங்காய் மட்டைகளை ஊறவைத்துத் துப்பு உற்பத்தி செய்யப் பயன்படுத்த முடியும் என்று அவர் கோரியுள்ளார். அவரின் கோரிக்கைக்கு இராணுவத்தினர் சாதகமாகப் பதிலளித்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பதுங்கு குழி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் பயன்படுத்தப்பட்டது என்று நம்பப்படுகின்றது. பதுங்கு குழி இருப்பது தொடர்பில் இராணுவத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.
பதுங்கு குழியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த இராணுவத்தினர், அதுவரை காணியில் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாம் என்று காணியின் உரிமையாளருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அங்கு சென்ற பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர் க.துர்சோதனன் பதுங்குழியை முழுமையாக அழிக்க வேண்டாம் என்று இராணுவத்தினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன் அடிப்பாகம் பெட்டி வடிவில் இருப்பதால் அதைத் துப்புரவு செய்துதரும் பட்சத்தில் தேங்காய் மட்டைகளை ஊறவைத்துத் துப்பு உற்பத்தி செய்யப் பயன்படுத்த முடியும் என்று அவர் கோரியுள்ளார். அவரின் கோரிக்கைக்கு இராணுவத்தினர் சாதகமாகப் பதிலளித்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment