துருக்கிப் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு! நால்வர் பலி!

துருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள எஸ்கிசெஹிர் மாகாணத்தில்  அமைந்த ஒஸ்மான்காசி பல்கலைகழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை பல்கலைகழக வளாகத்திற்குள் நுழைந்த  பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் பல்கலைகழகத்தின் துணைத்தலைவர், ஆசிரியர் செயலாளர், ஒரு விரிவுரையாளர் மற்றும் ஒரு பணியாளர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களை மீட்ட காவல்துறையினர் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவன் தப்பிக்க முயற்சிக்காமல் காவல்துறையிடம் சரணடைந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




No comments