13 ஆவது திருத்தம் உள்ளவரை ஜனாதிபதி அவசி்யம்! - விமல் வீரவன்ச


13ஆவது திருத்தச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது சரியாக அமையாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். "13ஆவது திருத்தத்திற்கு அமைய மாகாண சபைகள் உருவாக்கத்தின் ஊடாக ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரங்கள் இல்லாமல் செய்யப்படுகின்றது. மக்கள் விடுதலை முன்னணி, நிறைவேற்று அதிகாரங்களை இல்லாமல் செய்யும் இந்த முன்மொழிவின் ஊடாக ஐக்கிய இலங்கையை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம் மாகாண அரசாங்கங்களின் மீது ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம் இல்லாமல் போகும். ஆவது 13 வது திருத்தத்தை அகற்றாமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாமல் செய்யப்பட்டால். அது நாட்டை அராஜகத்திற்குள் தள்ளிவிடும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments