அவசரமாக மூடப்பட்டது வவுனியா சிங்கள பாடசாலை!காரணம் இதுதான்!

வவுனியா ஈரற்பெரியகுளம் பிரதேசத்தில் உள்ள சிங்கள பாடசாலையை
இன்று வியாழக்கிழமை காலை அவசரமாக தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை வளாகத்திலுள்ள கட்டிடமொன்றில் உள்ள தேன்கூடு கலைந்ததை அடுத்து அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையை தொடர்ந்து பாடசாலை அதிபரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

வவுனியா ஈரற்பெரியகுளம் பெரகும் மகா வித்தியாலயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments