கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டி விபத்து - பாடசாலை மாணவன் உயிரிழப்பு


கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பரந்தன் பகுதியில் மாணவன் தனது துவிச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து துவிச்சக்கரவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மாணவன், உடனடியாக மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்துத் தொடர்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments