யாழில். வீதியோர மரங்களின் கிளைகளை வெட்டும் போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்க அறிவுறுத்தல்
யாழ்ப்பாணத்தில் மின் கம்பிகளுக்கு இடையூறாக காணப்படும் மரங்களின் கிளைகளை மின்சார சபையினர் வெட்டும் போது, உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்குமாறு மின்சார சபையினருக்கு மாவட்ட செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
யாழ். மாவட்ட சுற்றாடல் குழு கூட்டத்தில் , மின் கம்பிகளுக்கு இடையூறாக காணப்படுவதாக , மரக்கிளைகளை மின்சார சபையினர் கண்மூடி தனமாக வெட்டி வீதிகளில் விட்டு செல்வதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.
அதனை அடுத்து, இனிவரும் காலங்களில் இலங்கை மின்சார சபையினர் மரக்கிளைகளை வெட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது குறித்த பிரதேச உள்ளூராட்சி மன்றங்களுடன் ஒன்றிணைந்து வெட்டுவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட செயலர் அறிவுறுத்தினார்
இக் கூட்டத்தில் மாநகர பிரதி முதல்வர், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment