யாழில். காச நோயால் பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் காச நோயால் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மாவிட்டபுரம் பகுதியை சேர்ந்த தயாளன் உருத்திரா (வயது 22) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் , தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற வேளை , அவரை பரிசோதித்த வைத்தியர்கள் உயிரிழந்து விட்டார் என அறிக்கையிட்டனர்.
பெண்ணின் உயிரிழப்புக்கு காச நோயே காரணம் என அறிக்கையிடப்பட்டுள்ளது.

Post a Comment