அனுரவுக்கும் அக்கறை இல்லை!



நாட்டில் இனப்பிரச்சினை இல்லை என்ற தோரணையில் கருத்துக்களை ஜனாதிபதி வெளிப்படுத்தி வருவது குறித்து தமிழ்கட்சிகளின் தலைவர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

 அநுர, நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை, ஊழல் ஒழிப்பு, காஸா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றிப் பேசிய போதிலும், தமிழர் இனப்பிரச்சினை, அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து எதனையும் பிரஸ்தாபிக்கவில்லை.

இந்நிலையில் ஜனாதிபதியின் இவ்வுரை தொடர்பில் கடும் அதிருப்தியை தமிழ்கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்.

எந்த சிங்களத் தலைவர்கள் ஆட்சிப்பீடமேறினாலும் தமிழர்கள் ஏமாளிகளாகவே இருக்கவேண்டும் என்பதையே அவரது உரை புலப்படுத்தியிருப்பதாகவும், ‘தமிழர்களின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத் தற்போதைய அரசாங்கம் தயாரில்லை என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கடந்தகால நாடாளுமன்ற உரைகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. அதே நிலைப்பாட்டையே இப்போது ஐ.நா பொதுச் சபையிலும், மனித உரிமைகள் பேரவையிலும் அரசாங்கம் எடுத்துரைத்து வருகின்றது. அதுமாத்திரமன்றி சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக பல்லாயிரம் உயிர்களைப் பலிகொடுத்து தமிழர்கள் நடாத்திய உரிமைப் போராட்டத்தை மலினப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளே தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிங்கள பௌத்தர்களாகிய தாமே இந்நாட்டின் உரித்தாளர்கள் எனவும், தமிழர்கள் தமக்கு அடிமைகளே எனவும் சிந்திக்கும் எண்ணப்போக்கு இங்கு மேலோங்கியிருக்கிறது. இதனை சீரமைப்பதற்கு சிங்கள மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படவேண்டும் என அதிருப்தி வெளியிட்டுள்ளனர்

No comments