விசாரணை முடிந்ததா?
முல்லைத்தீவு மாவட்ட புகைப்பட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் இன்று (17) காலை விசாரணைக்குள்ளாக்கபட்டுள்ளார்
விசாரணைக்காக அழைக்கப்பட்ட குமணன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்களுள் ஒருவரும் சட்டதரணியுமான நடராசா காண்டீபன் அவர்களுடன் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் விசாரணைக்காக சென்ற நிலையில் சுமார் பத்து மணியளவில் ஆரம்பித்த விசாரணை சுமார் ஏழு மணித்தியாலங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளது.
புலம்பெயர் நாட்டிலிருந்தான நிதிபரிமாற்றங்கள் சில தொடர்பில் விசாரணைகள் நடைபெற்றதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் விசாரணை தரப்புக்கள் அதனை பற்றி கருத்து தெரிவிக்க மறுதலித்துள்ளன.
Post a Comment