எதிர்வரும் சனிக்கிழமை பணயக்கைதிகளை அனுப்பாவிட்டார் மீண்டும் போரைத் தொடங்குவோம்
எதிர்வரும் சனிக்கிழமை நண்பகலுக்குள் ஹமாஸ் பணயக்கைதிகளை திருப்பி அனுப்பாவிட்டால் காசாவில் தீவிரமான சண்டை மீண்டும் தொடங்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
இஸ்ரேல் முக்கிய விதிகளை மீறியதாக ஹமாஸ் திங்களன்று கூறியதைத் தொடர்ந்து எதிர்வரும் சனிக்கிழமை மேலும் மூன்று பணயக்கைதிகளை விடுவிப்பதை தற்காலிகமாக பிற்போடுவதாக ஹமாஸ் கூறியதையடுத்து போர்நிறுத்தம் கேள்விக்குறியாகியது.
சனிக்கிழமை நண்பகலுக்குள் ஹமாஸ் எங்கள் பணயக்கைதிகளை திருப்பி அனுப்பவில்லை என்றால் போர்நிறுத்தம் முடிவுக்கு வரும், மேலும் ஹமாஸ் தீர்க்கமாக தோற்கடிக்கப்படும் வரை இஸ்ரேலிய பாதுகாப்பு படை மீண்டும் தீவிர சண்டையைத் தொடங்கும் என்று நெதன்யாகு தனது பாதுகாப்பு அமைச்சரவையுடனான கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட காணொளியில் தெரிவித்தார்.
நெதன்யாகுவின் காணொளிக்கு பின்னர், இஸ்ரேலிய இராணுவம் தெற்கில் கூடுதல் படைகளை அனுப்பும் என்று கூறியது.
ரிசர்வ் வீரர்கள் உட்பட கூடுதல் துருப்புக்களுடன் வலுவூட்டல்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.
Post a Comment