பேருந்துக்கள் மோதி விபத்து - நால்வர் உயிரிழப்பு


குருநாகல், தோரயாய பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், ஒரு பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், விபத்தில் 25 பேர் காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments