வடக்கு உட்பட 9 மாகாணங்களிலும் போலி வைத்தியர்கள்!


போலி வைத்தியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

"வடக்கு உட்பட நாட்டின் 9 மாகாணங்களிலும் போலி வைத்தியர்கள் சிலர் கடமையாற்றுகின்றார்கள். அவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவத்துறை மகத்தானது. போலி வேடம் தயாரித்து எவரும் மருத்துவத்துறைக்குள் உள்நுழைய முடியாது. மக்களின் உயிருடன் விளையாட எவருக்கும் இடமளிக்க முடியாது." - என்றார்.

No comments